For this Day:

;

Thirukural : Nilaiyaamai - 9

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

மு.வ. உரை:
இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

கலைஞர் உரை:
நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்தி்ற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; தி்ரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.

சாலமன் பாப்பையா உரை:
உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.

Explanation:
Death is like sleep; birth is like awaking from it.

No comments: