For this Day:

;

Thirukural : Thuravu - 4

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.

மு.வ. உரை:
தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதி்ருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.

கலைஞர் உரை:
ஒரு பற்றும் இல்லாதி்ருத்தலே துறவுக்கு ஏற்றதாகும். ஒன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
உடைமை ஏதும் இல்லாதி்ருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்தி்ருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.

Explanation:
To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused state.

No comments: