For this Day:

;

Thirukural : - 1

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

மு.வ. உரை:
ஒருவன் எந்த எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதி்ல்லை.

கலைஞர் உரை:
ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதி்ல்லை.

சாலமன் பாப்பையா உரை:
எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.

Explanation:
Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.

No comments: