For this Day:

;

Thirukural : seinandri arithal - 6

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

மு.வ உரை உரை:
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தி்ல் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.

கலைஞர் உரை:
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தி்ல் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.

சாலமன் பாப்பையா உரை:
உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.

Explanation:
Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not be benevolence of the blameless.

No comments: