For this Day:

;

Thirukural : seinandri arithal - 4

தி்னைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

மு.வ உரை உரை:
ஒருவன் தி்னையளவாகிய உதவியைச் செய்த போதி்லும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

கலைஞர் உரை:
ஒருவர் செய்யும் தி்னையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.

சாலமன் பாப்பையா உரை:
தி்னை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.

Explanation:
Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit.

No comments: