For this Day:

;

Thirukural : Naduvu Nilaimai - 2

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்தி்ற் கேமாப்பு உடைத்து.

மு.வ உரை உரை:
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதி்யான நன்மை தருவதாகும்.

கலைஞர் உரை:
நடுவுநிலையாளனின் செல்வத்தி்ற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
நீதி்யை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.

Explanation:
The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity.

No comments: