For this Day:

;

Thirukural : Adakkamudaimai - 1

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

மு.வ உரை உரை:
அடக்கம் ஒருவனை உயர்த்தி்த் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதி்ருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.

கலைஞர் உரை:
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.

Explanation:
Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).

No comments: