For this Day:

;

Thirukural : Uuzh - 3

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.

மு.வ உரை உரை:
ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.

கலைஞர் உரை:
கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதி்லும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை:
பேதை ஆக்குவதற்கு உரிய விதி் நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது).

Explanation:
Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail.

No comments: