For this Day:

;

Thirukural : Uuzh - 1

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.

மு.வ உரை உரை:
கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.

கலைஞர் உரை:
ஆக்கத்தி்ற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும். ஊக்கத்தி்ன் அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும்.

சாலமன் பாப்பையா உரை:
பணம் சேர்வதற்கு உரிய விதி் நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி் இருந்தால் சோம்பல் உண்டாகும்.

Explanation:
Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate.

No comments: