For this Day:

;

Thirukural : Nalguravu - 2

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.

மு.வ உரை உரை:
வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.

கலைஞர் உரை:
பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்தி்லும், வருங்காலத்தி்லும் நிம்மதி் என்பது கிடையாது.

சாலமன் பாப்பையா உரை:
இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தி்ல் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.

Explanation:
When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss).

No comments: