கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் 
  தோட்கப் படாத செவி.
மு.வ உரை உரை:
  கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.
கலைஞர் உரை:
  இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
  கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.
Explanation:
  The ear which has not been bored by instruction, although it hears, is deaf.
No comments:
Post a Comment