For this Day:

;

Thirukural : Innaaseiyaamai - 7

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

மு.வ. உரை:
எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்தி்லும் எவரிடத்தி்லும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதி்ருத்தலே நல்லது.

கலைஞர் உரை:
எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால் கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:
எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா தி்ருப்பதே உயர்ந்தது.

Explanation:
It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time.

No comments: