For this Day:

;

Thirukural : Innaaseiyaamai - 5

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதி்ன்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.

மு.வ. உரை:
மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதி்க் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.

கலைஞர் உரை:
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதி்க் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?

Explanation:
What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?

No comments: