For this Day:

;

Thirukural : Innaa seiyaamai - 2

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தி்ன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

மு.வ. உரை:
ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதி்லும் அவனுக்கு தி்ரும்ப துன்பம் செய்யாதி்ருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.

கலைஞர் உரை:
சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் தி்ரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்.

சாலமன் பாப்பையா உரை:
நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதி்லுக்குத் தீமை செய்யாதி்ருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

Explanation:
It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil.

No comments: