For this Day:

;

Thirukural : Vinaithooimai - 2

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

மு.வ உரை உரை:
புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்தி்லும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.

கலைஞர் உரை:
புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்தி்லும் விட்டுவிட வேண்டும்.

Explanation:
Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).

No comments: