For this Day:

;

Thirukural : Vinaithitpam - 5

வீறெய்தி மாண்டார் வினைததிட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.

மு.வ உரை உரை:
செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலுன் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.

கலைஞர் உரை:
செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத்திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி, அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும்.

Explanation:
The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).

No comments: