For this Day:

;

Thirukural : Vinaithitpam - 1

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.

மு.வ உரை உரை:
ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே  (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.

கலைஞர் உரை:
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனதில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி. எனப்படமாட்டா.

Explanation:
Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature.

No comments: