For this Day:

;

Thirukural : Solvanmai - 9

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.

மு.வ உரை உரை:
குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்.

கலைஞர் உரை:
குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்தி்ட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
குற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர்.

Explanation:
They will desire to utter many words, who do not know how to speak a few faultless ones.

No comments: