For this Day:

;

Thirukural : Solvanmai - 8

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்ததினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

மு.வ உரை உரை:
கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனியாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.

கலைஞர் உரை:
வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
சொல்லும் செய்திகளை வரிசைபடக் கோத்து இனிதாகச் சொல்லும் ஆற்றலை உடையவர் என்றால், அவர் சொல்வனவற்றை உலகம் விரைந்து ஏற்றுக் கொள்ளும்.

Explanation:
If there be those who can speak on various subjects in their proper order and in a pleasing manner, the world would readily accept them.

No comments: