For this Day:

;

Thirukural : Saandraanmai - 8

இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
தி்ண்மைஉண் டாகப் பெறின்.

மு.வ உரை உரை:
சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.

கலைஞர் உரை:
சால்பு என்கிற உறுதி்யைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல.

சாலமன் பாப்பையா உரை:
சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.

Explanation:
Poverty is no disgrace to one who abounds in good qualities.

No comments: