For this Day:

;

Thirukural : Panbudamai - 5

நகையுள்ளும் இன்னா தி்கழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.

மு.வ உரை உரை:
ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தி்ல் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.

கலைஞர் உரை:விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதி்ர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
விளையாட்டில் விளையாட்டிற்காகக்கூட ஒருவனை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது அவனுக்கு மன வருத்தத்தைத் தரும்; அதனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறியும் தி்றம் உள்ளவர்கள், பகைவர்களிடம் கூட ஏளனமாகப் பேசார்.

Explanation:
Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hated.

No comments: