For this Day:

;

From Thirukural - Maanam

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்  குன்ற வருப விடல்.

மு.வ உரை உரை:
இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.

கலைஞர் உரை:
கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்தி்டல் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்தி்ற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.

Explanation:
Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death.

No comments: