For this Day:

;

Thirukural : piruvaatraamai - 3

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

மு.வ. உரை:
அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தி்ல் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி் மொழியை நம்பித் தெளிவது அரிது.

கலைஞர் உரை:
பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்; பிரிந்தி்டேன் என அவர் கூறுவதை உறுதி் செய்தி்ட இயலாது.

சாலமன் பாப்பையா உரை:
எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அறிந்து கொள்ள முடியவில்லை.

Explanation:
As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible.

No comments: