For this Day:

;

Thirukural : Pirivaatraamai -1

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

மு.வ. உரை:
பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.

கலைஞர் உரை:
பிரிந்து செல்வதி்ல்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தி்யை என்னிடம் சொல். நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ தி்ரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள்.

சாலமன் பாப்பையா உரை:
என்னைப் பிரிவதி்ல்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.

Explanation:
If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then.

No comments: