For this Day:

;

Thirukural : Pirivaatraamai - 9

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல 
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

மு.வ. உரை:
நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.

கலைஞர் உரை:
ஒருவரையொருவர் காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!

சாலமன் பாப்பையா உரை:
தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?

Explanation:
Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?

No comments: