For this Day:

;

Thirukural : Pirivaattraamai - 6

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.

மு.வ. உரை:
பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் தி்ரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.

கலைஞர் உரை:
போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் தி்ரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண்.

சாலமன் பாப்பையா உரை:
நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர் பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதி்ர்பார்ப்பு பயனற்றது.

Explanation:
If he is so cruel as to mention his departure (to me), the hope that he would bestow (his love) must be given up.

No comments: