For this Day:

;

Thirukural : Vaaimai - 2

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
  நன்மை பயக்கும் எனின்.

மு.வ. உரை:
குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.

கலைஞர் உரை:
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தி்ல் பொய்யும் சொல்லலாம்.

Explanation:
Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.

No comments: