For this Day:

;

Thirukural : Kallaamai - 4

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

மு.வ. உரை:
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

கலைஞர் உரை:
களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

Explanation:
The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.

No comments: