For this Day:

;

Thirukural :koodaa ozhukkam - 4

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து  வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

மு.வ. உரை:
தவக்கோலத்தி்ல் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.

கலைஞர் உரை:
புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தி்ல் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.

Explanation:
He who hides himself under the mask of an ascetic and commits sins, like a sportsman who conceals himself in the thicket to capture birds.

No comments: