For this Day:

;

Thirukural : Koodaa ozhukkam - 7

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.

மு.வ. உரை:
புறத்தி்ல் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தி்ல் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்தி்ருப்பவர் உலகில் உணடு.

கலைஞர் உரை:வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு.

சாலமன் பாப்பையா உரை:குன்றிமணியின் மேனியைப் போல் வெளித் தோற்றத்தி்ல் நல்லவராயும், குன்றிமணியின் மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும் வாழ்வோர் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றனர்.

Explanation:
(The world) contains persons whose outside appears (as fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the nose of that berry.

No comments: