For this Day:

;

Thirukural : Vaan Sirappu - 6

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

மு.வ உரை உரை:
வானத்தி்லிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தி்ல் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

கலைஞர் உரை:
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.

சாலமன் பாப்பையா உரை:
மேகத்தி்லிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.

Explanation:
If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen.

No comments: