For this Day:

;

Thirukural : Vaan Sirappu - 1

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

மு.வ உரை உரை:
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.

கலைஞர் உரை:
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்தி்ருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.

சாலமன் பாப்பையா உரை:
உரிய காலத்தி்ல் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.

Explanation:
The world its course maintains through life that rain unfailing gives; Thus rain is known the true ambrosial food of all that lives.

No comments: