For this Day:

;

Thirukural : Padarmelinthirangal - 4

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் 
ஏமப் புணைமன்னும் இல்.

மு.வ. உரை:
காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை.

கலைஞர் உரை:
காதல் கடல்போலச் சூழ்ந்துகொண்டு வருத்துகிறது. ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
காதல் துன்பம், வெட்கம், இவ்விரண்டிலும் என்னுள் மிகுந்திருப்பது காதல் துன்பம் என்னும் கடலே; அதைக் கடக்கப் பாதுகாப்பான படகுதான் இல்லை.

Explanation:
There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with.

No comments: