For this Day:

;

Thirukural : Kanviduppazhithal - 3

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் 
இதுநகத் தக்க துடைத்து.

மு.வ. உரை:
அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.

கலைஞர் உரை:
தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன. இது நகைக்கத்தக்க ஒன்றாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

Explanation:
They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?

No comments: