For this Day:

;

Thirukural : Kanviduppazhithal - 9

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை 
ஆரஞர் உற்றன கண்.

மு.வ. உரை:
காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கிடையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.

கலைஞர் உரை:
இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை. இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்?

சாலமன் பாப்பையா உரை:
அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.

Translation:
When he comes not, all slumber flies; no sleep when he is there;  Thus every way my eyes have troubles hard to bear.

Explanation:
When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony.

No comments: