For this Day:

;

Thirukural : Kanviduppazhithal - 8

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் 
காணாது அமைவில கண்.

மு.வ. உரை:
உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

கலைஞர் உரை:
என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!

சாலமன் பாப்பையா உரை:
உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!

Translation:
Who loved me once, nonloving now doth here remain;  Not seeing him, my eye no rest can gain.

Explanation:
He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him.

No comments: