For this Day:

;

Thirukural : Nalampunarthuraithal - 9

மலரன்ன கண்ணாள் முகமொத்தி் யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.

மு.வ. உரை:
தி்ங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்தி்ருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.

கலைஞர் உரை:
நிலவே! மலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்தி்ற்கு ஒப்பாக நீயிருப்பதாய் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால் (அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்தி்ட) பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்.

சாலமன் பாப்பையா உரை:
நிலவே மலர் போன்ற கண்ணை உடைய என் மனைவியின் முகம் போல ஆக நீ விரும்பினால் நான் மட்டும் காணத் தோன்று; பலரும் காணும்படி தோன்றாதே.

Explanation:
O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all.

No comments: