For this Day:

;

Thirukural : Kaatharsirappuraiththal - 3

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
தி்ருநுதற்கு இல்லை இடம்.

மு.வ. உரை:
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.

கலைஞர் உரை:
நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!

சாலமன் பாப்பையா உரை:
என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.

Explanation:
O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved.

Kaatharsirappuraiththal-3

No comments: