For this Day:

;

Thirukural : Naadu - 4

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தி்யல்வது நாடு.

மு.வ உரை உரை:
மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

கலைஞர் உரை:
பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.

Explanation:
kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes.

No comments: