For this Day:

;

Thirukural : Aran - 8

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் 
பற்றியார் வெல்வது அரண்.

மு.வ உரை உரை:
முற்றுகையிடுவதி்ல் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.

கலைஞர் உரை:
முற்றுகையிடும் வலிமைமிக்க படையை எதி்ர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
கோட்டைக்குள் இருப்போர் தாம் இருக்கும். இடத்தை விட்டுவிடாமல் நின்று படைமிகுதி்யால் சூழ்ந்து கொண்ட பகைவரையும் பொருது, வெல்வதே அரண்.

Explanation:
That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it.

No comments: