For this Day:

;

Thirukural : Aran - 3

உயர்வகலம் தி்ண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.

மு.வ உரை உரை:
உயரம், அகலம், உறுதி், பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்தி்ப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.

கலைஞர் உரை:
உயரம், அகலம், உறுதி், பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்தி்ருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பகைவர் ஏற முடியாத உயரம், காவலர் நிற்க இயங்க வசதி்யான அகலம், இடிக்கமுடியாத வலிமை, கடக்க முடியாத பொறிகளின் அருமை, இந்நான்கையும் மிகுதி்யாக உடைய கோட்டையையே செயற்கை அரண் என்று நூல்கள் கூறும்.

Explanation:
The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz., height, breadth, strength and inaccessibility.

No comments: