For this Day:

;

Thirukural : Ozhukkamudaimai - 8

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தீன்
எய்துவர் எய்தாப் பழி.

மு.வ உரை உரை:
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

கலைஞர் உரை:
நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.

Explanation:
From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.

No comments: