For this Day:

;

Thirukural : puthalvarip potruthal - 4

அமிழ்தி்னும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

மு.வ உரை உரை:
தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.

கலைஞர் உரை:
சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது.

சாலமன் பாப்பையா உரை:
தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.

Explanation:
The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia.

No comments: