"A question that sometimes drives me hazy: Am I, or the others, crazy?"
- Albert Einstein
For this Day:
My favourite quote
Thirukural : Neethaar perumai - 7
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
மு.வ உரை உரை:
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று செ?ல்லப்படும் ஐந்தி்ன் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.
கலைஞர் உரை:
ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் தி்றன் கொண்டவனையே உலகம் போற்றும்.
சாலமன் பாப்பையா உரை:
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.
Explanation:
The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell.
A Thought for Today
Thought for Today
"Giving connects two people, the giver and the receiver, and this connection gives birth to a new sense of belonging."
- Deepak Chopra
Thirukural : Neethaar Perumal - 6
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
மு.வ உரை உரை:
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
கலைஞர் உரை:
பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.
Explanation:
The great will do those things which is difficult to be done; but the mean cannot do them.