For this Day:

;

Haiku - by Sujatha

சுஜாதாவின் ஹைகூ கவிதைகள். 🙏

வாடவில்லை. 
மேசையில் 
கடதாசிப்பூக்கள்

*
விதைக்காமல்
பழுத்தது
நிலவு
*
தினம் புலம்பெயர்வால்
முகவரி தேடுகிறது
மேகம்
*
நாய்கள் குரைக்கவில்லை.
பாதையில்
இராணுவம்
*
சாயம் போகாமல்
நனைந்தது
வானவில்
*
ஏன் உடல் இளைத்தாய்?
வயதான 
கருவாடே!
*
எதிரிக்கு வாழ்த்து அட்டை.
ஒட்டவில்லை
முத்திரை

*
முத்தமிட்டாள் காதலி.
எழும்பவேயில்லை
பிணம்
*
பச்சைக் குழந்தை போல்
உள்ளாடை அணிவதில்லை
வெங்காயம்
*
என் மனத்திரையில்
உன் நினைவலைகளாக
காதல்
*
ஒரு காலை வேளை
பல் துலக்கப்பட்டது
சீப்பு
*
சுதந்திரதின விழாவில் 
வழங்கப்பட்டது
கூண்டிலடைத்த வெண்புறா
*
சீக்கிரம் எழுந்து கொள்.
இன்றுனக்கு
தூக்கு.
*
உலக வர்த்தக மையம் முன்னால்
என்னைக் கைது செய்தது
உன் புன்னகை
*
இடுப்பைப் பிடிக்கையில்
சிலிர்க்காதே
வெண்டிக்காயே!
*
சட்டெனக் குதித்தது
நதிக்குள்
நீர் வீழ்ச்சி
*
விபச்சாரி விரும்பவில்லை
பல நிறங்களில்
ரோஜாச் செடியை.
*
கிணற்றைப்போல் 
தொட்டிக்குள்ளும்
நிலவு.
*
ஓ நயாகரா!
என்னை நனைத்தது
கண்ணீர்.

No comments: