For this Day:

;

Thirukural : Padarmelinthirangal - 7

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் 
யாமத்தும் யானே உளேன்.

மு.வ. உரை:
காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.

கலைஞர் உரை:
நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன்.

சாலமன் பாப்பையா உரை:
காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன்.

Explanation:
I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live.

No comments: