For this Day:

;

Thirukural : Avaavaruthal - 1

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

மு.வ. உரை:
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.

கலைஞர் உரை:
ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்தி்லும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்.

சாலமன் பாப்பையா உரை:
எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.

Explanation:
(The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire.

No comments: