For this Day:

;

Thirukural : Vehggaamai - 7

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் 
மாண்டற் கரிதாம் பயன்.

மு.வ. உரை:
பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.

கலைஞர் உரை:
பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின்  பயன், நலம் தருவதாக இருக்காது.

சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருளை அவர் விரும்பாதி்ருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா.

Explanation:
Desire not the gain of covetousness. In the enjoyment of its fruits there is no glory.

No comments: