For this Day:

;

Thirukural : Meiyunardhal - 3

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

மு.வ. உரை:
ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

கலைஞர் உரை:
ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்.

சாலமன் பாப்பையா உரை:
சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.

Explanation:
Heaven is nearer than earth to those men of purified minds who are freed from doubt.

A Thought for Today

"The intention that man should be happy is not in the plan of Creation."
- Sigmund Freud

Thought for Today

"A friend is, as it were, a second self."
- Cicero

Thirukural : Meiyunardhal - 2

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி 
மாசறு காட்சி யவர்க்கு.

மு.வ. உரை:
மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.

கலைஞர் உரை:
மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்.

Explanation:
A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven).

A Thought for Today

"Happiness is a butterfly, which when pursued, is always just beyond your grasp, but which, if you will sit down quietly, may alight upon you."
- Nathaniel Hawthorne